Wednesday, January 12, 2011

இறைவணக்கம்

ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சி பெற்று
        அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதியிணைந் தியங்குகின்ற நிலைமைக்கேற்ப
       மூலகங்கள் பலவாகி அவையி ணைந்து
பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
       பிறப்பு இறப்பிடைஉணர்த லியக்கமாகி
நீதிநெறி உணர்மாந்தராகி வாழும்
        நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.