Tuesday, January 11, 2011

சுய அறிவால் உனையறியும் சாவியாகும்

இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி

    இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர்?

விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்

    வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை

அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்

    அதற்கு இடம் உள்ளது இரு புருவமையம்

தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி

    சுய அறிவால் உனையறியும் சாவியாகும்.